மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் இரட்டை போனஸ்? 7வது ஊதியக்குழு தகவல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் இரட்டை போனஸ்? 7வது ஊதியக்குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் இரட்டை போனஸ்? 7வது ஊதியக்குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் இரட்டை போனஸ்? 7வது ஊதியக்குழு தகவல்!

மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அடிப்படை சம்பளத்தின் படி DA மற்றும் HRA தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்த நிலையில், அரசு ஊழியர்கள் இரட்டை போனஸ் பெற இருப்பதாக 7 வது ஊதியக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

இரட்டை போனஸ்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த மாதத்தில் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகையை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி அறிவித்திருந்தது. இந்த DA உயர்வானது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவுகளை (HRA) ஆகஸ்ட் மாதம் முதல் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் இந்த வாரத்தில் இரட்டை போனஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 10 லட்சம் பேர் பதிவு!

இது தொடர்பாக 7வது ஊதியக்குழு அளித்துள்ள தகவலின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் படி DA மற்றும் HRA அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. அந்த வகையில் மையம் வகுத்த விதிகளின்படி, ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் DA தொகை 25 சதவீதத்தை தாண்டும்போது HRA விகிதம் 3 சதவிகிதம் அதிகரிக்கும். மேலும் DA தொகை 25%ஐ தாண்டும்போது, HRA தொகை தானாக திருத்தப்படும் என்று கடந்த 2017ம் ஆண்டு செலவுத்துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது.

இந்த அறிக்கைகளின் படி, திருத்தப்பட்ட HRA இந்த மாத சம்பளத்துடன் வழங்கப்படும். இதில், மத்திய அரசு ஊழியர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களின் வகையின்படி HRA உயர்வைப் பெறுகிறார்கள். அதாவது X வகை நகரங்களில் வசிப்பவர்களுக்கு HRA உயர்வு 27 சதவீதமாகவும், Y மற்றும் Z பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு, HRA உயர்வு முறையே 18 சதவிகிதம் மற்றும் 9 சதவிகிதமாக இருக்கும். இப்போது 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் உள்ளன.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் எச்சரிக்கை!

தொடர்ந்து 5 லட்சத்துக்கும் அதிகமான மற்றும் ஐந்து லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் Y மற்றும் Z என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது நுழைவு மட்டத்தில் (நிலை 1) ஒரு அரசு ஊழியரின் சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை இருக்கும். அதாவது ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் இந்த வரம்பில் உள்ளது. இதில் 17 சதவிகித DA விகிதத்தில், ரூ.18000 சம்பளத்துடன் கூடிய ஊழியர்கள் ரூ.3060 தொகையை DA வாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பெறுகின்றனர். இருப்பினும், ஜூலை முதல் அதாவது DA உயர்வுக்குப் பிறகு இந்த ஊழியர்கள் மாதத்திற்கு ரூ.5040 பெற இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!