ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணத் தொகை – முதல்வர் தொடக்கி வைப்பு!
புதுச்சேரியில் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக 5 ஆயிரம் வழங்கும் பணியினை முதல்வர் ரெங்கசாமி தொடங்கி வைத்தார்.
நிவாரண நிதி:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரவு பகலாக இடைவிடாது. பெய்த கனமழையால் முக்கிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது வெள்ளம் போல் காட்சியளித்தது. அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பல ஹெக்டேர் நில பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ரூ.83000 கோடி வருமான வரி செலுத்த உள்ள எலான் மஸ்க் – வைரலாகும் பதிவு! நெட்டிசன்கள் விமர்சனம்!
இதையடுத்து புதுச்சேரி முதல்வர் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 5000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக 5 ஆயிரம் வழங்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்துள்ளார். புதுவையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முக்கிய விவரங்கள் இங்கே!
அதே போல் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 4,500 ரூபாய் வழங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் 3, 27000 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.156 கோடி ரூபாய் மழை நிவாரணமாக வழங்கப்பட உள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருட்கள் அரசு நிறுவனமான அமுதசுரபி மூலம் வழங்கப்படும். அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.