கல்லூரி மாணவிகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை – நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்!
பிரகதி திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகள் 2021 – 2022ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகளை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் பள்ளி கல்வியோடு நிறுத்தி விடாமல் உயர்கல்வியை தொடர அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பிரகதி திட்டத்தின் கீழ் பொறியியல் படிப்புகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பொறியியல் முதலாமாண்டு மாணவிகள் டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரும் போது விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகையானது மாணவிகளின் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் கூட இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த பிரகதி திட்டத்தின் கீழ் மாணவிகள் உதவித்தொகை பெற சில நிபந்தனைகளும் உள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
அதன்படி பிரகதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவிகளின் குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும். பிரகதி திட்டத்தில் தேர்வாகும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் உரிய ஆவணங்களுடன் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.