மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!

வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகை சுமார் 3% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

DA உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு DA விகிதங்களை மேலும் 3 சதவீதம் உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் அடிப்படையில் DA உயர்வைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கொரோனவால் நிறுத்தப்பட்டதான மத்திய அரசு ஊழியர்களின் DA விகிதத்தை17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டிருந்தது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

இந்த தொகை ஜூலை 2021 தவணையுடன் திரும்ப அளிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3 சதவிகிதம் DA மற்றும் DR தொகை உயர்த்தப்பட்டால், எதிர்காலத்தில் அவர்களின் அடிப்படை சம்பளத்திற்கு ஏற்றவாறு 31% DA தொகை உயர வாய்ப்புள்ளது. இதனுடன், அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) 24 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரியில் அரசு மானியக் கொடுப்பு 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்திலும் இவை மேலும் 3 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

இதற்கிடையில் தற்போது ஆலோசிக்கப்பட்டு வரும் 3% DA உயர்வு இந்த மாதம் அறிவிக்கப்பட்டால், அந்த தொகை அக்டோபர் மாத சம்பளத்துடன் செலுத்தப்படும் என தெரிகிறது. இருந்தாலும் செப்டம்பர் மாதத்திற்கான சம்பளத்துடன் DA உயர்வை சேர்க்க வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் பரிந்துரைத்துள்ளன. இந்த DA உயர்வால் கிட்டத்தட்ட 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதற்கிடையில் பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் அரசு ஊழியர்களுக்கான DA விகிதங்களை 11 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளன.

GPay, Phonepe, Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு – நெட் வசதி இல்லாமல் பணப்பரிவர்த்தனை!

அதன் கீழ் உத்தரபிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்க்கண்ட், ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது 3% DA உயர்த்தப்பட்டால், ஒரு மத்திய அரசு ஊழியர் மாதம் ரூ. 20,000 அடிப்படை சம்பளம் பெறுகிறார் என்றால், அதில் 3% DA உயர்வு சுமார் ரூ.600 ஆக இருக்கும். எனவே, ஊழியர்கள் அடிப்படை சம்பளத்துடன் கூடுதலாக ரூ.600 பெறுவர். இப்போது 31 சதவிகிதமாக இருக்கும் DA தொகையின் மொத்த உயர்வை கணக்கிட்டால் அது ரூ.20 ஆயிரத்துக்கு 31% என்ற அடிப்படையில் ரூ.6,200 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!