தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் – ஐகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடுதலாக நிவாரணம் குறித்து தெரிவிக்குமாறும் ஆணையிட்டுள்ளது.
நிவாரணத்தொகை:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால் ஒவ்வொரு குடும்பமும் சொந்தங்களையும், நண்பர்களையும் இழந்து தவித்தனர். வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர் இல்லாததால் குடும்பத்தை சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா முதல் அலையின் போது வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் இரண்டாம் அலையின் போது அனைத்து வயதினரும் அதிக பாதிப்புள்ளாகினர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு சம்பளம் கட் – மாநகராட்சி பணியாளர்கள் கவனத்திற்கு!
குறிப்பாக நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டதால் குழந்தைகள் பெற்றோர்களை இழந்து தவித்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையை வழங்கலாம் என்று தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் அரசிற்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து மத்திய அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையை அறிவித்தது. அதனை தொடர்ந்து மாநில அரசுகள் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து கொரோனோவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை வழங்கி வருகிறது.
மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – உயர்கல்வி மாணவர்கள் கவனத்திற்கு!
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 36,200 குடும்பங்களுக்கு தலா 50,000 வீதம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடுதலாக நிவாரணத்தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு தெரிவிக்குமாறும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.