ரெட் அலர்ட், ஆரஞ்சு அலெர்ட் – வண்ணங்கள் எவ்வாறு தீர்மானம் செய்யப்படுகிறது? எதை உணர்த்துகிறது?
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எச்சரிக்கைக்கு விடுக்கப்படும் வண்ணங்கள் எதை குறிக்கிறது என்று இந்த பதிவில் காணலாம்.
எச்சரிக்கை வண்ணங்கள்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடைவெளி ஏதும் இல்லாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் நவம்பர் 10,11 ஆகிய நாட்களில் தாழ்வான பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் – ஐகோர்ட் உத்தரவு!
இந்த மழை காரணமாக தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களுக்கு முன்பு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. தற்போது தமிழகத்தின் வட பகுதிகளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்குவதால் டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த எச்சரிக்கை சிவப்பு,ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பச்சை நிற வண்ணங்களால் குறிக்கப்படுகிறது.
அதாவது வானிலையின் தீவிரத்தன்மையை உணர்ந்து அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் இந்த வண்ணங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதன்படி சிவப்பு நிறம் – உடனடியாக செயலாற்ற வேண்டிய நடவடிக்கையை உணர்த்துகிறது. ஆரஞ்சு நிறம் – தயார்நிலையில் இருக்க வேண்டியதை உணர்த்துகிறது. மஞ்சள் நிறம் – விழிப்புடன் நிலைமையை கவனித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. பச்சை நிற குறியீடு – எச்சரிக்கை ஏதுமில்லாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்பதை குறிக்கிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு சம்பளம் கட் – மாநகராட்சி பணியாளர்கள் கவனத்திற்கு!
கனமழை ஏற்படும் நாட்களில் 24 மணி நேரத்தில் 204.5 மில்லி மீட்டருக்கோ அதற்கு அதிகமாகவோ மழை பொழிவு தொடர்ச்சியாக பதிவானால் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும். அதுவே 115.6 முதல் 204.4 மில்லி மீட்டர் அளவில் தொடர்ச்சியாக மழை பதிவானால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படும். அதே நேரத்தில் மழை அளவு 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் இடையே பதிவானால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படும். மேலும் இதன் மூலம் மலை வகைப்படுத்தப்படுகிறது. இந்த எச்சரிக்கை நிறம், மழை, புயல், பனிப்பொழிவு, புழுதிப்புயல் போன்றவற்றுக்கும் பொருந்தும்.