ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த புதிய ஹாப்பி நியூஸ் – 50% மானியத்தில் உணவு பொருட்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவும் வகையில் 50% மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது.
மானிய விலை:
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மற்றும் மானிய விலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ரேஷன் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் பிரச்சனைகளை சரி செய்யும் பொருட்டு, அதிநவீன பிராண்டட் லாப்டாப் மற்றும் மின்னணு பதிவு இயந்திரங்கள் கொண்டு வர உணவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!
இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் அந்த்யோதயா திட்டத்தின் கீழ் உள்ள 13.75 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ உப்பு மற்றும் 2 கிலோ சர்க்கரையானது 50 % மானியத்தில் வழங்கப்பட உள்ளதாகவும், மக்களுக்கு தேவையான மற்ற பொருட்களையும் இது போல் அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.