தமிழகத்தில் மின்சாரத்திற்கு 50% மானியம் – அரசின் புதிய திட்டம் அறிமுகம்!
தமிழகம் முழுவதும் தற்போது வீட்டு மின் பயனர்கள் அனைவருக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
50% மானியம்:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மின் பயனர்களுக்கு அரசு அளித்த வாக்குறுதியின் படி, முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு அதிக அளவிலான வருவாய் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், தமிழகத்தில் மின்வாரிய துறையில் ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடு செய்ய மத்திய அரசு தமிழகத்தில் மின் கட்டணங்களை உயர்த்த பரிசீலித்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் 10ம் தேதி முதல் தமிழக மின்வாரியம் அனைத்து வகை மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது.
அரசின் இந்த மின் கட்டண உயர்வு நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. இதனால் தற்போது அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது அரசு அளிக்கும் முதல் இலவச 100 யூனிட் மின்சாரத்தை தானாக முன்வந்து திரும்ப அளிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. முன்னதாக 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த இலவச மானியம் செல்லுபடியாகாது. இதனால் 500 யூனிட் மின்சாரத்திற்கு அவர்கள் புதிய நிர்ணயித்தின் படி ரூ.675 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மக்களே கவனமா இருங்க… தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போது இலவச மானிய திட்டத்தை திரும்ப அளிக்கும் பட்சத்தில், அவர்களது மின் கட்டணத்தில் இரண்டாவது 100 யூனிட்டுகளுக்கு 50% மானியம் அளிக்கப்பட உள்ளது. இதனால், மின் பயனர்களுக்கு ரூ.675 கட்டணத்திற்கு பதிலாக ரூ.450 மட்டுமே மின் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான ஒப்புதல் பெறுவதற்காக தமிழக மின்சார வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு அளிக்க உள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு தமிழகத்தில் இந்த புதிய திட்டம் அமலுக்கு வரும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்