மக்களே கவனமா இருங்க… தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

0
 மக்களே கவனமா இருங்க... தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!
 மக்களே கவனமா இருங்க... தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!
 மக்களே கவனமா இருங்க… தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழக பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக மழை பெய்து வருகிறது.  தற்போது இன்றைய (06-10-2022) வானிலை நிலவரத்தை பற்றிய தகவல்களை விரிவாக பார்ப்போம்.

வானிலை தகவல்‌

தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்காலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டியிருக்கிறது.  இந்த நிலையில் இன்றைய வானிலை நிலவரத்தை பற்றி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று முதல் 8ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதிலும் குறிப்பாக தமிழகத்தில் திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கடலூர்‌, கள்ளக்குறிச்‌சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, திருப்பத்தூர்‌, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌ மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து 09.10.2022  மற்றும் 10.10.2022  ஆகிய இரு தினங்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவீங்களா? ஜாக்கிரதை மக்களே! ஊடுருவும் சோவா வைரஸ்!

Exams Daily Mobile App Download

இதையடுத்து அக்டோபர் 6ம் தேதி அன்று தென்‌ கிழக்கு மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌ எனவும் அக்டோபர் 6 முதல்‌ 10 வரை  குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌  வேகத்தில் வீசக்கூடும்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!