ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவீங்களா? ஜாக்கிரதை மக்களே! ஊடுருவும் சோவா வைரஸ்!
இந்தியாவில் தற்போது இணையவழி பண பரிமாற்றம் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் இணையவழி பண மோசடிகளும் அதிகரித்து வருகிறது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை தாக்கிய தொழில்நுட்ப வைரஸ் ஒன்று தற்போது இந்தியாவிலும் நுழைந்து விட்டது.
சோவா வைரஸ்:
இந்தியாவில் மக்கள் இணையத்தின் உதவியுடன் எந்த இடத்தில் இருந்தும் ஆன்லைன் வாயிலாக பண பரிமாற்றம் செய்து வருகின்றனர். அதற்கேற்றவாறு வங்கிகளும் 24 மணி நேரமும் ஆன்லைன் வாயிலாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. இதனை ஒரு புறம் வளர்ச்சியாக பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு புறம் ஆபத்தாகவும் கருதப்படுகிறது. தற்போது மொபைல் பேங்கிங்கை குறி வைத்து பல மோசடிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தொழில்நுட்ப உலகில் சோவா எனும் வைரஸ் வலம் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ‘சோவா’ என்ற வைரஸ் ஆன்லைன் மோசடியாளர்களால் பயன்படுத்தப்பட்டது. ஹேக்கர்கள் இந்த வைரஸை பயன்படுத்தி எளிதாக வங்கி கணக்கில் உள்ள பணத்தை கையாடல் செய்து வருகின்றனர். இதனால் ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளை குறி வைத்து இந்த சோவா வைரஸ் உருவாக்கப்பட்டது. தற்போது சோவா வைரஸ் இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. இது குறித்து இந்திய கணினி அவசர கால மீட்பு குழு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
66 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு.. இந்திய நிறுவனத்தின் 4 மருந்துகளுக்கு அதிரடி தடை!
Exams Daily Mobile App Download
அதாவது இந்த சோவா தொழில்நுட்ப வைரஸானது 5 – வது தலைமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது இந்திய வங்கி கணக்குகளை குறி வைக்க தொடங்கியுள்ளது. அதனால் மொபைல் பேங்கிங் மூலம் பண பரிமாற்றம் செய்பவர்கள் உங்களின் போனில் செட்டிங்ஸை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஓரளவு தகவல்களை பாதுக்காக்க முடியும். மேலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்களின் மொபைல் செயலிகளை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்வது நல்லது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்