தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி – தகுதியுடையோர், தகுதியில்லாதோர் யார்?

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி - தகுதியுடையோர், தகுதியில்லாதோர் யார்?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி - தகுதியுடையோர், தகுதியில்லாதோர் யார்?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி – தகுதியுடையோர், தகுதியில்லாதோர் யார்?

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 பவுன் மதிப்பபிலானா நகைக்கடன் தள்ளுபடியில் உள்ள நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

நகைக்கடன்:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் திமுக தலைமையிலான அரசு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்களின் மொத்த நகைக்கடன் 85 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது இயலாத ஒன்றாக உள்ளது. நகைக்கடன் தள்ளுபடிக்கு கடும் நிபந்தனைகள் கொண்டு வர அரசு திட்டமிட்டது.

தமிழகத்தில் நாளை (டிச.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களில் 37 வகையான விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த விவரங்கள் சேகரிப்பின் போது நகைக்கடன் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி அளிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதிகள் குறித்து மக்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் நகைக்கடன் பெற தகுதியான நிபந்தைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற தேவையான நிபந்தனைகள்:

ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 40 கிராமுக்கு உள்பட்டு இருந்தால் இதர தகுதிகளுக்கு உள்பட்டு அந்த நகைகடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

  • 31.03.2021 அன்று வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடனத்தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
  • கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் 31.03.2021 ஆம் நாள் வரை 5 பவுனுக்கு மிகாமல், உள்ள நகைகளுக்கு ஈடாக பெற்ற மொத்த நகைக்கடன்களில், அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள தொகையைப் பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும் இந்தப் பட்டியலில் கண்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத நேர்வுகளை நீக்கி, மீதம் உள்ள பொது நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.

தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – நாளை கடைசி தேதி!

  • ஆதார் எண்ணின் அடிப்படையில், ஒரே நபர் மற்றும் குடும்ப அட்டையில் கண்டுள்ள அவர்தம் குடும்பத்தினரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பெற்றுள்ள நகைக்கடன் 40 கிராமுக்கு பட்டிருந்தால் மட்டுமே தள்ளுபடி பட்டியலில் இடம்பெறும்.
  • தமிழ்நாடு அரசின் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் மேற்கூறிய இதர நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் அவர்களும் நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள்.
  • கடன்தாரரின் குடும்ப அட்டை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு, தற்போது வரை செல்லுபடி ஆகக்கூடிய குடும்ப அட்டையைக் கொண்டுள்ள கடன்தாரர்கள் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!