தமிழக அரசின் இத்துறை ஊழியர்களுக்கு 5% சம்பள உயர்வு – அமைச்சர் ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து 5 % ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்ந்துள்ளது. கொரோனா பேரிடர் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகின்றனர்.
மத்திய அரசின் PM KISAN உதவித்தொகை பெறும் பயனாளிகள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!
அடுத்ததாக தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் நீண்ட காலமாக ஊதிய உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்தது வந்தனர். இதனையடுத்து 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்த ஆலோசனை நேற்று நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 120 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்க கோரி வலியுறுத்தி வந்தனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊதிய உயர்வு குறித்த ஆலோசனை நடைபெற்றது. நேற்று 4ம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பேசிய போக்குவரத்து கழக அமைச்சர், அரசு சார்பாக முதற்கட்டமாக கடந்த 1.9.2019 லிருந்து 2 சதவீத உயர்வும், 01.01.2022 லிருந்து அடுத்தக்கட்டமாக 3 சதவீதம் உயர்வும் சேர்த்து மொத்தமாக 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு ஒரு முறை சிறப்பு ஊதியமாக ரூ.300 வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.