மத்திய அரசின் PM KISAN உதவித்தொகை பெறும் பயனாளிகள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!
PM-KISAN திட்டத்தின் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் 10-வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் வெளியிட்டார். இந்த நிலையில், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை, எளிதாக பெற அஞ்சல் துறை புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
புதிய வசதி அறிமுகம்:
மத்திய அரசின் கிசான் சம்மன் நிதி திட்டமானது விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் 2018 டிசம்பர் 1 அன்று அறிவிக்கப்பட்டு 2019 பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை அரசாங்கம் ரூ.2,000 ஐ தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மாற்றுகிறது. இதுவரை பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 10 தவணைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த ஆண்டு 8.13% சம்பள உயர்வு!
மேலும் 11வது தவணைத் தொகைக்காக விவசாகிகள் காத்து கொண்டு உள்ளனர். மேலும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் தங்களது பணத்தை எளிதாக பெற அஞ்சல் துறையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் சிவாஜிகணேஷ் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பில், நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் PM-KISAN என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இத் திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 1 லட்சம் போ் பயன்பெறுகிறாா்கள். இந்த விவசாயிகள் மே 31, 2022 க்குள் P.M .கிசான் இணையதளத்தில் ஆதாருடன், கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது, கைப்பேசிக்கு வரும் கடவு எண்ணைப் (பாஸ்வோ்டு) பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை பதிவு செய்து கொண்டால், விவசாயிகளுக்கு இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் தவணை தொகை அவா்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியரை தொடா்புக் கொண்டு ஆதாருடன் கைப்பேசி எண்ணை இணைக்கலாம். இதற்காக அவர்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவைக்கு ரூ. 50 கட்டணம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.