மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!

சமீபத்தில் வெளிவந்துள்ள தகவலின் படி 7வது சம்பள கமிஷனின் படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த உயர்வுக்கு பிறகு 4 கூடுதல் கொடுப்பனவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அகவிலைப்படி உயர்வு

தற்போது அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள், சமீபத்தில் வெளிவந்த அகில இந்திய CPI-IW தரவுகள் மூலம் சற்று உற்சாகமடைந்துள்ளனர். இந்த ஏஐசிபி இன்டெக்ஸ், ஏப்ரல் மாதத்திற்கான டிஏவை நிர்ணயிப்பதில் முக்கியமான காரணியாகும். இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 சதவீதமாக அதிகரித்துள்ளதால் வரும் ஜூலை மாதத்தில் அடுத்த அகவிலைப்படி தொகையில் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகளை நம்பினால், ஜூலை மாதத்தில் DA தொகை ஐந்து சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம்.

மத்திய அரசின் கிசான் திட்டத்தின் ரூ.2000 பணம் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!

இதன் பொருள் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த DA 39 சதவீதத்தை எட்டும். இப்போது ஜூலை மாதத்தில் DA அதிகரிக்கப்படலாம் என்ற பரவலான ஊகங்களுக்கு மத்தியில், DA அளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் மற்ற 4 கொடுப்பனவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஊடக அறிக்கைகள் தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் அகவிலைப்படி (DA) என்பது அடிப்படை ஊதியத்திற்கு விகிதாசாரமாகும். இதன் விளைவாக, DA உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர வருங்கால வைப்பு நிதியும் (PF) உயர்த்தப்படும். அதே போல டிஏ உயர்வு காரணமாக ஊழியர்களின் பணிக்கொடைத் தொகையும் அதிகரிக்கும்.

Exams Daily Mobile App Download

இந்த அகவிலைப்படி உயர்வு, ஊழியர்களின் போக்குவரத்து கொடுப்பனவு மற்றும் நகர அலவன்ஸ் ஆகியவற்றின் உயர்வுக்கான பாதையையும் தெளிவுபடுத்தியுள்ளது. இது தவிர DA உயர்த்தப்பட்டுள்ளதால் HRA ஐ உயர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்கிடையில், ஏப்ரல், மாதத்திற்கான அகில இந்திய CPI-IW குறியீடு 1.7 புள்ளிகள் அதிகரித்து 127.7 ஆக இருந்தது. இந்த 1 சதவீத மாற்றத்தில், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபி இன்டெக்ஸ் தரவுகளை கணக்கிட்டால் ஜூலை மாதத்தில் டிஏ தொகை 5 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!