மத்திய அரசின் கிசான் திட்டத்தின் ரூ.2000 பணம் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!

0
மத்திய அரசின் கிசான் திட்டத்தின் ரூ.2000 பணம் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!
மத்திய அரசின் கிசான் திட்டத்தின் ரூ.2000 பணம் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!
மத்திய அரசின் கிசான் திட்டத்தின் ரூ.2000 பணம் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 11வது தவணைப்பணம் வெளியிடப்பட்டு 11 நாட்கள் ஆகியும் இன்னும் விவசாயிகளின் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரவில்லை என்றால், இந்த பணத்தை பெற்றுக்கொள்ளும் சில வழிமுறைகள் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிசான் திட்டம்

கடந்த மே 31ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரின் கிசான் சம்மன் நிதியின் 11வது தவணைப் பணத்தை வெளியிட்டார். அந்த வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11வது தவணைப் பணம் வெளியான பிறகும், பல விவசாயிகள் தங்களது வங்கி கணக்கில் இன்னும் 2000 ரூபாய் வரவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இப்போது இந்த பணம் கிடைக்காததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, கிசான் இணையதளத்தில் பதிவு செய்யும் போது ஆதார் எண் தவறாக இருந்தால் 11வது தவணைப் பணமான ரூ.2000 உங்கள் கணக்கில் வராது.

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர காத்திருப்பவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை எச்சரிக்கை!

அதைச் சரியாகப் பெற, pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் மூலையில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன் உதவியுடன் ஆதார் எடிட் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் அதைத் திருத்த முடியும். இந்த செயல்முறையின் போது, பயனாளி நிலை என்ற விருப்பத்திற்கு சென்று மற்ற தகவல்கள் சரியானதா, இல்லையா என்பதை சரிபார்க்கலாம். மேலும் தவறாக கொடுக்கப்பட்ட தகவலையும் திருத்திக்கொள்ளலாம். அதே நேரத்தில் உங்கள் வங்கி விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால், அதை சரிசெய்ய வேளாண் துறை அலுவலகம் அல்லது லெக்பாலை தொடர்பு கொள்ள வேண்டும்.

Exams Daily Mobile App Download

இது சரியான பிறகு, பணம் உங்கள் கணக்கிற்கு அனுப்பப்படும். இதற்குப் பிறகும் உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால், வேளாண் அதிகாரிகளை உதவி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். அதன் பிறகு உங்கள் கணக்கிற்கு பணம் மாற்றப்படும். இது தவிர பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 11வது தவணைப் பணத்தை பெறாததற்கு e-KYC செயல்முறை ஒரு முக்கிய காரணம் ஆகும். ஆனால், அரசாங்கம் இப்போது e-KYC க்கான காலக்கெடுவை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இது தவிர விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசு சில ஹெல்ப்லைன் எண்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • PM கிசான் யோஜனா கட்டணமில்லா எண் – 011-24300606,
  • PM கிசான் ஹெல்ப்லைன் எண் – 155261
  • மின்னஞ்சல் ஐடி[email protected] ஆகியவை மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!