மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 5% உயர்வு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - அகவிலைப்படி (DA) 5% உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - அகவிலைப்படி (DA) 5% உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 5% உயர்வு!

7வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி,சத்தீஸ்கரின் பல்லாயிரக்கணக்கான மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், பூபேஷ் பாகேல் தலைமையிலான அரசு அகவிலைப்படியை (DA) 5 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த புதிய DA உயர்வு மே 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

ஜாக்பாட் அறிவிப்பு:

கொரோனா காலகட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனால் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக நீண்டகாலமாக காத்திருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு, அதிரடியான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசின் கருவூலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடியாக இருக்கும் என்றும் DA அறிவிப்பால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (மே 6) முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் – மாநில அரசு முடிவு!

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், சத்தீஸ்கர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பகெல் அறிவித்துள்ளார். மே 1ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பைத் தொடர்ந்து அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. மே 1 முதல் இந்த அகவிலைப்படி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஊழியர்களின் நலன் கருதி இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், இமாசலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை அறிவித்தன. இந்நிலையில் தற்போது சத்தீஸ்கர் அரசும் தனது ஊழியர்களுக்கான அகவிலையை உயர்த்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!