நாளை (மே 6) முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் – மாநில அரசு முடிவு!
தற்போது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (மே 6) முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை ஜூலை 3 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இப்போது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கும் மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் எஸ்.சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் விடுமுறை!
இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவில், ‘1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகளை மே 4ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மாநில அரசின் அறிவிப்பின்படி, பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் தற்போது முடிந்துள்ள நிலையில், கோடை விடுமுறைக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
எவ்வாறாயினும், பள்ளி மாணவர்களுக்கான SA-II தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கும், ஆன்லைனில் மதிப்பெண்களைப் பதிவேற்றுவதற்கும், பதவி உயர்வு பட்டியல்களைத் தயாரிப்பதற்கும், அடுத்த கல்வியாண்டில் (2022-23) மாணவர் சேர்க்கை போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்ததும், 2022-23ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் ஜூலை 4ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்