தமிழகத்தின் 4 பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

0
தமிழகத்தின் 4 பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தின் 4 பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தின் 4 பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் குன்னூர் மற்றும் தாராபுரத்தில் உள்ள 4 பள்ளிகளை சேர்ந்த சுமார் 48 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைபரவல் வீழ்ச்சியடைந்து வந்ததை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், நவம்பர் மாதத்தில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டுமாக திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் பலருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அகவிலைப்படி (DA ) கணக்கீட்டில் மாற்றம்!

இதையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, மற்ற அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி இருக்க மீண்டுமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் கொரோனா தொற்றின் ஆதிக்கம் எழுச்சியடைய துவங்கி இருக்கிறது. அந்த வகையில் குன்னூர் மற்றும் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 பள்ளிகளை சேர்ந்த 48 மாணவ, மாணவிகளுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதை தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள 3 தனியார் பள்ளிகளை சேர்ந்த 21 மாணவிகள் உடல்நிலை சரி இல்லாமல் இருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து அம்மாணவிகள் அனைவரும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு, பதவிகள் & வினாத்தாள் – முழு விபரங்கள் இதோ!

இந்நிலையில், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பள்ளியை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், பள்ளிக்கு 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த 27 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் அப்பள்ளிக்கும் 3 நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!