சந்தியாவை பழிவாங்க நினைக்கும் சல்மா, சரவணனுக்கு தெரியாமல் குடும்பத்தை வரவழைக்க திட்டம் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் சந்தியா பேசிக் கொண்டிருக்க சிவகாமி போன் செய்து இருவரும் எப்படி இருக்கீங்க என கேட்கிறார். பின் சந்தியா அவரது அண்ணனிற்கு போன் செய்து அனைவரும் விமானத்தில் வர பணம் அனுப்ப சொல்கிறார்.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில், சரவணன் மேடையில் அனைவரும் நன்றாக பேசியதாக சொல்ல, சந்தியா சரவணன் தான் அங்கே பேசியவர்களில் சிறந்தவர் என்பது போல சொல்கிறார். எல்லாத்தையும் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல எப்படி இருக்கீங்க என கேட்கிறார். அப்போது சரவணன் சிரிக்க, சந்தியாவை போன் செய்து மற்ற போட்டியாளர்கள் வர சொல்கின்றனர். அங்கே சல்மாவும் இருக்க, சந்தியா சல்மாவை பார்த்து நான் வேண்டும் என்றே செய்யவில்லை என மன்னிப்பு கேட்கிறார். அப்போது மற்ற போட்டியாளர்கள் நாங்க சல்மாவிடம் பேசிவிட்டோம் என சொல்கிறார்.
தமிழகத்தின் 4 பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
அப்போது சல்மா பரவாயில்லை என வெளியே சொன்னாலும் மனதிற்குள் பழிவாங்கும் எண்ணத்துடன் இருக்கிறார். பின் அனைவரும் சேர்ந்து விளையாட்டு விளையாடுகின்றனர். இதை வாய்ப்பாக பயன்படுத்தி சந்தியாவை அடிக்க வேண்டும் என சல்மா நினைக்கிறார். அனைவரும் விளையாட அடுத்து சரவணன் சல்மா விளையாடுகின்றனர். அப்போது சல்மா சரவணனை அடிக்க அவர் வலி தாங்க முடியாமல் கையை எடுக்கிறார். பின் சந்தியாவும் சல்மாவும் விளையாட வர, சல்மா அடிக்க வரும் போது சந்தியாவிற்கு போன் வருகிறது.
அப்போது சந்தியா அங்கிருந்து கிளம்ப சல்மா சந்தியா தப்பித்துவிட்டாள் என நினைத்து வருத்தப்படுகிறார். பின் சிவகாமி போன் பேச குடும்பத்தினர் அனைவரும் சரவணன் சந்தியா எப்படி இருக்கிறார்கள் என கேட்கின்றனர். பின் அர்ச்சனா சரவணன் கடைக்கு செல்ல அங்கே சர்க்கரை படித்துக் கொண்டிருக்கிறார். பின் அர்ச்சனா சர்க்கரையை வீட்டிற்கு போக சொல்லி கடையில் இருப்பதை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை எல்லாம் இங்கே எதுவும் இல்லை என சொல்லி அனுப்பி விடுகிறார். சந்தியா சரவணன் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தினமும் நிறையா ஆர்டர் வரும் என சொல்கிறார்.
சந்தியா அண்ணன் போன் செய்ய சரவணனிற்கு தெரியாமல் சந்தியா பேசுகிறார். அனைவரும் இங்கே வர விமான டிக்கெட் போட வேண்டும். அதனால் பணம் தேவைப்படுகிறது என சொல்கிறார். எல்லாரும் எப்படி வருவார்கள் ஏற்கனவே வந்து பழக்கம் இருக்கிறதா என கேட்க இல்லை என சந்தியா சொல்கிறார். பணம் போடுவது பிரச்சனை இல்லை அவங்க சரியாக வந்துருவாங்களா என கேட்க, அந்த நேரம் சரவணன் வருகிறார். அவருக்கு தெரியாமல் பேசிவிட்டு சந்தியா போனை வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.