மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அகவிலைப்படி (DA ) கணக்கீட்டில் மாற்றம்!
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி உயர்வினை கணக்கீடு செய்யும் முக்கிய பொருளாதார அளவீடுகளுக்கான அடிப்படை ஆண்டை தற்போது மாற்றியுள்ளது என்று 7வது ஊதியக் குழுவின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி கணக்கீடு:
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் என்று பொதுவாக ஆண்டிற்கு இரண்டு முறை திருத்தியமைக்கப்படும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்வடையும். அகவிலைப்படியானது தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு தவணைக்கான அகவிலைப்படியானது நிதியாண்டின் நாட்டில் பணவீக்கத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. பணவீக்கத் தரவுகளின் அடிப்படையில் முக்கிய பொருளாதார அளவீடுகளுக்கான அடிப்படை ஆண்டை மத்திய அரசு அவ்வப்போது மாற்றி அமைகிறது.
TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு, பதவிகள் & வினாத்தாள் – முழு விபரங்கள் இதோ!
இந்நிலையில், அகவிலைப்படி, HRA மற்றும் TA அதிகரிப்புடன் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கடந்த அக்டோபர் மாதத்தில் அறிவித்த பிறகு, இந்த வாரம் அகவிலைப்படி கணக்கீட்டில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இந்த மாற்றங்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், அகவிலைப்படிக்கான அடிப்படை ஆண்டு திருத்தப்பட்டது. ஊதிய விகிதக் குறியீடுகளின் புதிய தொடர் (WRI-Wage Rate Index) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தின் புதுப்பிப்புகளின்படி, புதிய WRI தொடர், 2016=100 இன் அடிப்படை ஆண்டுடன், 1963-65 இன் அடிப்படை ஆண்டைக் கொண்டிருந்த தற்போதைய தொடருக்குப் பதிலாக இருக்கும்.
இந்த ரத்த வகை இருந்தால் கொரோனா தாக்கும் அபாயம் அதிகம் – ஷாக் ரிப்போர்ட்! தவறாமல் படிங்க!
அதாவது அகவிலைப்படியை கணக்கிடும் முறை முற்றிலும் மாறிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மாற்றங்கள், நிகழும் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் ஊழியர்களின் ஊதிய முறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) பரிந்துரைத்தபடி, நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கும் குறியீட்டின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தேசிய புள்ளியியல் ஆணையம் ஊதிய விகிதக் குறியீட்டின் அடிப்படை ஆண்டை 1963-65 முதல் 2016 வரை மாற்றியமைத்ததையும் அரசு ஊழியர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.