இந்த ரத்த வகை இருந்தால் கொரோனா தாக்கும் அபாயம் அதிகம் – ஷாக் ரிப்போர்ட்! தவறாமல் படிங்க!
டெல்லியில் கங்கா ராம் மருத்துவமனை ரத்த வகைகளை அடிப்படையாக கொண்டு கொரோனா பாதிப்பு குறித் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
ஆய்வு:
கடந்த வருடம் சீனாவின் உஹான் மாநிலத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு விரைவாக பரவி பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இந்த உலக சுகாதாரத்துறையின் அங்கீகாரம் பெற்று 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் டிச.3ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் தினசரி பாதிப்பும் 10 ஆயிரத்துக்கு கீழ் பதிவாகிறது. அடுத்த தாக்குதலாக தற்போது கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனை ரத்த வகைகளை அடிப்படையாக கொண்டு கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்த ஆய்வு முடிவில் A, B மற்றும் Rh+ ரத்த வகைகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம் என்றும் O, AB மற்றும் Rh- ஆகிய ரத்த பிரிவுகளை கொண்டவர்களுக்கு வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. AB இரத்த பிரிவை உடைய 60 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் B இரத்த பிரிவை கொண்ட ஆண் நோயாளிகள் B இரத்த பிரிவை கொண்ட பெண் நோயாளிகளைக் காட்டிலும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.