தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின்பு கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீண்டும் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்.19ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2 முதல் தேர்வுகள் துவக்கம் – கால அட்டவணை வெளியீடு!
அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பணிகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகளை வழங்குவதற்காக ஆசிரியர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியாளர்களாகவும் மற்றும் பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாகவும் செயல்படவுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறும் அதனை தொடர்ந்து 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. அதனால் பிப்ரவரி 19 முதல் 22 வரை தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் 23 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.