இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

0
இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் திரிபுராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவ தொடங்கியது. இதில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், அசாம், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று பரவ தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிப்ரவரி 27 வரை 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதில் தெரிவித்தாவது இன்று முதல் 20ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

மேலும் உணவகங்கள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மூடப்பட்ட இடங்களில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றால் இதில் 50% பார்வையாளர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு அறிவித்த அனைத்து கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!