10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2 முதல் தேர்வுகள் துவக்கம் – கால அட்டவணை வெளியீடு!
கொரோனா 3ம் அலைத்தொற்றால் பள்ளிகள் வழக்கம் போல செயல்படாத நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான போர்டு தேர்வுகளை திட்டமிட்டபடி ஆப்லைன் முறையில் நடத்த சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தேர்வு தேதி
சத்தீஸ்கர் மாநில இடைநிலைக் கல்வி வாரியம் (CGBSE) தற்போது 10 மற்றும் 12வது வாரியத் தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 10 ஆம் வகுப்புக்கான போர்டு தேர்வுகள் மார்ச் 3 முதலும், 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 2 முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிவித்தபடி CG வாரியம் இந்த போர்டு தேர்வுகளை நேரடி முறையில் நடத்த இருக்கிறது. இதற்கு முன்னதாக CGBSE 10, 12வது போர்டு தேர்வு தேதிகள் டிசம்பர் 2021ல் வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 27 வரை 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
இப்போது இந்தத் தேர்வுகளின் விரிவான கால அட்டவணையை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 3 முதல் துவங்கி மார்ச் 23 அன்று முடிவடையும். அதே போல 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 2 முதல் துவங்கி 30 அன்று முடிவடையும். சத்தீஸ்கரைப் பொறுத்தவரை, கொரோனா பாதிப்புகளின் மூலம் ஆன்லைன் கற்றல் காரணமாக பல பள்ளிகளால் பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை என்பதை கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கிட்டத்தட்ட 30% குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
மேலும், மாணவர்கள் இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள திட்டப் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள மொத்த 6 அசைன்மெண்ட்டில் , குறைந்தது 2 பணிகளை மாணவர்கள் சமர்ப்பித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாரியத் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா 3ம் அலையை கருத்தில் கொண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தாலும், தேர்வுகள் கட்டாயமாக ஆப்லைனில் நடத்தப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.