2023 டிசம்பர்-க்குள் அனைத்து கிராமங்களிலும் 4G சேவை – மத்திய அமைச்சர் உறுதி!
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமங்களில் இன்னும் 4ஜி சேவை கிடைக்காமல் உள்ள நிலையில், இது குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் தற்போது தகவல் அளித்துள்ளார்.
2023ல் 4ஜி சேவை:
நாடு முழுவதும் 5ஜி இணைய வேகத்தை அடைந்துள்ள நிலையில், நாட்டில் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமங்களில் இன்னும் 4ஜி சேவைக்கான தேடல் சென்று கொண்டிருக்கிறது. தற்போது நாட்டின் 13 முக்கிய நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 2023 டிசம்பர் மாத இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விரிவாக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டம் – மத்திய அமைச்சர் சூப்பர் தகவல்!
Exams Daily Mobile App Download
ஆனால், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா போன்ற வட கிழக்கு மாநிலங்களில் 4ஜி சேவை பயன்பாட்டிற்கு வருவது குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு நடத்தினார். அதன்பிறகு, 2023 டிசம்பர் மாதத்திற்குள் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளிலும் 4ஜி சேவை மூலம் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates