சென்னையில் விரிவாக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டம் – மத்திய அமைச்சர் சூப்பர் தகவல்!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு குறித்து மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில்:
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது மெட்ரோ ரயிலில் தினந்தோறும் ஏராளமான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் அரசு பல வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் தற்போது சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி ரூபாய் செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ளது. மேலும் சென்னையில் 118.9 கீ.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.
ட்விட்டரை தொடர்ந்து பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் முன்னணி நிறுவனங்கள் – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிஷான் ஷெட்டி சென்னை வடபழனி மெட்ரோ ரயில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போது நடைபெறும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.