ட்விட்டரை தொடர்ந்து பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் முன்னணி நிறுவனங்கள் – முழு விவரம் இதோ!
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் பல பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி இருக்கிறார். இந்நிலையில் ட்விட்டர் மட்டுமில்லாமல் மைக்ரோசாப்ட், இன்டெல், ஸ்னாப் ஆகிய நிறுவனங்களும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி இருக்கிறது.
ஊழியர்கள் பணிநீக்கம்:
சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பின் ட்விட்டர் ஊழியர்களின் நிலை, தலைமை பொறுப்பாளர்களின் நீக்கம், ப்ளூ டிக் பயனர்களுக்கு கட்டணம் என பல மாற்றங்களை அவர் அறிவித்த வண்ணம் இருக்கிறார். ட்விட்டரின் தலைமை பொறுப்பு மாறியது முதல் பல பணியாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். இதுவரை 50 சதவிகித ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகில் உள்ள பெரிய நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் மட்டுமில்லாமல் மைக்ரோசாப்ட், இன்டெல், ஸ்னாப் ஆகிய நிறுவனங்களும் ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்துள்ளது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது
Follow our Instagram for more Latest Updates
சீகேட்
ஹார்ட் டிரைவ் தயாரித்து வரும் சீகேட் டெக்னாலஜி, பொருளாதார சரிவு மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கான தேவை குறைந்து வருவதைக் காரணமாக வைத்து, சுமார் 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தின் 17-வது வனவிலங்கு சரணாலயம்.. ஓசூரில் அமைப்பு – அரசாணை வெளியீடு!
Exams Daily Mobile App Download
இன்டெல்
Intel Corp அடுத்த ஆண்டு $3 பில்லியனை சேமிக்க வேண்டும் என்பதால் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. CHIPS சட்டத்தில் இருந்து இன்டெல் பில்லியன் கணக்கான நிதியை வாங்கும் இந்த நேரத்தில் கூட இந்த நிர்வாகம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட்
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் மென்பொருள் தயாரிப்பின் வருவாய் குறைவாக இருப்பதால் பல பணியாளர்களை வேலை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது. கணினிகளுக்கான விண்டோஸ் உரிமங்களின் விற்பனை குறைவாக இருப்பதால் இந்த அதிரடி முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.