தமிழகத்தின் 17-வது வனவிலங்கு சரணாலயம்.. ஓசூரில் அமைப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் ஓசூர் பகுதியில் வன உயிரிகள் அதிகமாக உள்ளது. அதனால் இப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது வனவிலங்கு சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு சரணாலயம்:
தமிழகமானது சுமார் 17% வனப்பரப்பை கொண்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 16 வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இதில் முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ் பெற்றது. அதற்கு அடுத்த இடத்தை வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் பிடிக்கும். அந்த வரிசையில் தற்போது ஓசூர் பகுதியில் 17-வது வனவிலங்கு சரணாலயம் அமையவுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாவட்ட பகுதியில் 35 விதமான உயிரினங்கள் உள்ளது. அதே போல 238 பறவையினங்கள் உள்ளது. இந்த உயிரினங்களை காக்கும் பொருட்டு ஓசூர் கோட்டத்தின் அஞ்செட்டி, ஜவளகிரி, ஊரிகம் சரகங்களை உள்ளடக்கிய 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதியில் காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் அமையவுள்ளது.
தமிழக மக்களே கவனம்…. இன்னும் 5 நாட்களுக்கு கொட்டி தீர்க்க இருக்கும் மழை – வானிலை மையம் தகவல்!!
Exams Daily Mobile App Download
இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் காவிரி வடக்கு சரணாலயத்தில் தொடர்ச்சியாக இந்த சரணாலயம் அமையவுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் தமிழகத்தில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.