தமிழக மக்களே கவனம்…. இன்னும் 5 நாட்களுக்கு கொட்டி தீர்க்க இருக்கும் மழை – வானிலை மையம் தகவல்!!

0
தமிழக மக்களே கவனம்.... இன்னும் 5 நாட்களுக்கு கொட்டி தீர்க்க இருக்கும் மழை - வானிலை மையம் தகவல்!!
தமிழக மக்களே கவனம்.... இன்னும் 5 நாட்களுக்கு கொட்டி தீர்க்க இருக்கும் மழை - வானிலை மையம் தகவல்!!
தமிழக மக்களே கவனம்…. இன்னும் 5 நாட்களுக்கு கொட்டி தீர்க்க இருக்கும் மழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

வானிலை தகவல்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதையடுத்து இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள பகுதிகளின்‌ மேல்‌ நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்‌ காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிற 9ம் தேதி முதல் 11ம் தேதிகளில்‌ வடமேற்கு திசையில்‌ தமிழகம்‌ மற்றும்‌ புதுச்சேரி கடற்கரையை நோக்‌கி நகரக்கூடும்‌ என தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதனால் இன்று முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தகவல் தெரிவித்துள்ளது. அதே போல் இன்னும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. இதில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, திருப்பத்தூர்‌, இராணிப்பேட்டை வேலூர்‌ ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பை அள்ளித்தெளிக்கும் IT நிறுவனங்கள்.. கேப்ஜெமினி நிறுவனத்தில் 600 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

Exams Daily Mobile App Download

இதே போன்று, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, அரியலூர்‌, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, தர்மபுரி, திருவண்ணாமலை, கரூர், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முதல்‌ 12.11.2022 வரை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌ என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!