மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.4,500 வரை ஊதிய உயர்வு – குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.4,500 வரை ஊதிய உயர்வு - குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.4,500 வரை ஊதிய உயர்வு - குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.4,500 வரை ஊதிய உயர்வு – குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை!

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு உரிமை கோரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சம்பளத்தில் மற்றொரு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு

கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகை உயர்த்தப்பட்ட பிறகு, அவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது கொரோனா தொற்றுநோய் காரணமாக குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை (CEA) கோர முடியாமல் இருந்த ஊழியர்கள் இப்போது இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2022ம் ஆண்டு ரேஷன் கடைகளின் விடுமுறை தினங்கள் – முழு பட்டியல் இதோ

அந்த வகையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக மாதந்தோறும் ரூ.2,250 செலுத்த உரிமை கோர முடியும். ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மத்திய அரசு பணியாளர்கள் CEA க்கு உரிமை கோர முடியவில்லை. இப்போது கல்வித்தொகை தொடர்பாக, பணியாளர்கள் மற்றும் பயிற்சி அலுவலகம் (DoPT) ஜூலை மாதம் (OM) அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், CEA உரிமை கோரல்கள் சுய அறிக்கை அல்லது முடிவு, அறிக்கை அட்டை, எஸ்எம்எஸ், கட்டணம் செலுத்திய மின்னஞ்சலின் பிரிண்ட் அவுட் மூலமாகவும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வசதி மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 முடிவடையும் கல்வி ஆண்டுகளில் மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இப்போது மத்திய அரசு பணியாளர்களுக்கு, ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2250 என்ற வீதத்தில் 2 குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற உரிமை உண்டு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிச.25க்கு முன் 18 மாத DA நிலுவை – 7வது ஊதியக்குழு தகவல்!

இதில் இரண்டாவது குழந்தை இரட்டை குழந்தையாக இருந்தால், இந்த உதவித்தொகை முதல் மற்றும் இரண்டாவது குழந்தையின் கல்விக்காக வழங்கப்படும். இதன் மூலம் ஊழியரின் வருமானம் ரூ.4500 அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை (CEA) பெறுவதற்கு, மத்திய அரசு ஊழியர்கள் பள்ளிச் சான்றிதழையும், கோரிக்கை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக, குழந்தையின் அறிக்கை அட்டை, சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது ஆகியவையும் CEA கோரிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!