மத்திய அரசு ஊழியர்களுக்கு டிச.25க்கு முன் 18 மாத DA நிலுவை – 7வது ஊதியக்குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ பாக்கி தொகையானது வரும் டிசம்பர் 25ம் தேதிக்குள் வழங்க பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
DA நிலுவை:
மத்திய அரசி கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30ம் தேதி வரையிலான 18 மாத அகவிலைப்படி உயர்வினை நிலுவையில் வைத்தது. அதன்பிறகான, 2021 ஜூலை 1 முதல் உள்ள தவணைக்கான அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். முன்னதாக இந்த நிலுவை காலத்திற்கான DA அறிவிக்கப்பட்டு, அவை அடுத்து வரும் தவணைகளுடன் வழங்கப்படும் என்றும், நிலுவை காலத்திற்கான DA வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவித்தது. ஆனால் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்த காரணத்தால் அவற்றை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஹெலிகாப்டர் சேவைக்கு அனுமதி!
18 மாத நிலுவை தொகையையும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டாம் என்றும் தவணைகளாக வழங்கினால் கூட போதுமானது என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் பெரும் எதிர்பார்ப்பு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான தகவலின் படி டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவை மற்றும் அமைச்சரவை செயலாளருடன் இது தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்த வாய்ப்புள்ளது. ஜே.சி.எம்., தேசிய கவுன்சில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே நிலுவை தொகை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
அடுத்த 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – 30 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி!
தற்போது, 18 மாத DA நிலுவை தொகையை அரசு ஒரே தடவையில் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில் முன்வைத்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து பிரதமர் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த முடிவுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தால், மத்திய ஊழியர்களின் வங்கி கணக்கில் பெரிய அளவு தொகையானது கிடைக்கும். மத்திய அரசின் இந்த முடிவினால் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.