குளிர்கால ஒலிம்பிக் 2022 – 45 வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
குளிர்கால ஒலிம்பிக் 2022 - 45 வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி! ரசிகர்கள் அதிர்ச்சி!
குளிர்கால ஒலிம்பிக் 2022 - 45 வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி! ரசிகர்கள் அதிர்ச்சி!
குளிர்கால ஒலிம்பிக் 2022 – 45 வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி! ரசிகர்கள் அதிர்ச்சி!

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த மாதம் 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்தவர்களும், போட்டி ஏற்பாட்டாளர்களும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் கேம்ஸ்:

நாடு முழுவதும் 3 வது அலை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதை தொடர்ந்து சீனா தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா மற்றும் அதிக பரவல் ஆற்றல் உடைய ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இருப்பினும் தக்க பாதுகாப்பு விதிமுறைகளை மேற்கொண்டு 2022 ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பீஜிங் அரசாங்கம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து ஒலிம்பிக் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

தமிழகத்தில் ரயில்வே பணிக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய தகவல்!

இந்நிலையில் இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்த 25 வீரர்களுக்கும் மற்றும் 20 போட்டி ஏற்பாட்டாளர் என மொத்தம் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ அதிகாரிகளால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெய்ஜிங் ஒலிம்பிக் பங்கேற்கும் வீரர்கள் தொடர்ந்து கொரோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப் படுவதால் இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது.

சென்னைவாசிகள் கவனத்திற்கு – பிப்.16 முதல் புத்தக கண்காட்சி! நாளை டிக்கெட் முன்பதிவு!

பயோ பபுளில் இருந்தும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீனா மாத ஊரடங்கு திட்டத்தை ஒவ்வொரு நகரிலும் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமத்தில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 2022 ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!