TCS நிறுவனத்தில் 40,000+ காலிப்பணியிடங்கள் – MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ!
டிசிஎஸ் நிறுவனம் தனது அலுவலகங்களில் காலியாக இருக்கும் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு MBA பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த பதவிக்கான விண்ணப்ப முறை, தகுதி உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.
MBA வேலைவாய்ப்பு
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் 2022-23ம் நிதியாண்டின் துவக்கத்தில் சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் MBA பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை விரைந்து மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக TCS நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஒரு குறிப்பிடத்தக்க தொழில் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கான பாதை இப்போது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.50,000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
அந்த வகையில் 2020, 2021 & 2022 என தேர்ச்சி ஆண்டு கொண்டவர்கள் புதிய வேலைக்கான விண்ணப்பங்களை செலுத்தலாம். ஒவ்வொரு நாளும், எங்களில் அரை மில்லியன் பேர் வாடிக்கையாளர்களுக்கும் சமூகங்களுக்கும் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறோம். உங்கள் ஆர்வத்துடனும் ஆற்றலுடனும் இன்னும் நிறைய சாதிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்!’ என்று குறிப்பிட்டுள்ளது. இப்போது உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் சுற்றில் செயல்திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு முறை:
வாய்மொழித் திறனில் ஏழு கேள்விகளும், அளவுத் திறனில் 20 கேள்விகளும், வணிகத் திறனில் 20 கேள்விகளும் கேட்கப்படும்.
விண்ணப்ப முறை:
- முதலாவதாக nextstep.tcs.com/campus என்ற TCSன் Next Step போர்ட்டலுக்கு செல்லவும் .
- இதில், ‘Register now’ என்ற விருப்பத்தை கிளிக் செய்து IT வகையை தேர்வு செய்யவும்
- தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து உங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்
- உங்கள் நிலையை உறுதிப்படுத்த, Track Your Application என்பதைச் சரிபார்க்கவும்.
- இப்போது Applied for Drive என தோன்றும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், ஆபரேஷன்ஸ் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட், தகவல் தொழில்நுட்பம், பொது மேலாண்மை, பிசினஸ் அனலிட்டிக்ஸ், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட துறைகளில் இரண்டு வருட முழுநேர MBA/MMS/ PGDBA/PGDM பட்டம் முடித்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் எம்பிஏ படிப்பதற்கு முன் இளங்கலை தொழில்நுட்பத்தில் (பி.டெக்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஒட்டுமொத்த கல்வி இடைவெளி இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.