உலகின் முக்கிய 40 கோடி நபர்களின் ட்விட்டர் தகவல்கள் திருட்டு – அதிர்ச்சி அறிக்கை வெளியீடு!!
இஸ்ரேலை சேர்ந்த ஒரு முக்கிய சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஆனது ட்விட்டர் தளத்தில் உள்ள முக்கிய நபர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தகவல் திருட்டு:
சாமானியர்கள் முதல் உலகின் உட்சபட்ச பிரபலம் வரை தற்போது அனைவரும் ட்விட்டர் தளத்தில் தான் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தங்களின் கருத்தை மக்களிடம் எளிதாக சென்று சேர்ப்பதற்கு ட்விட்டர் தளம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் இந்த அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளது. இந்நிலையில், சமீப காலமாக அதிகரித்து வரும் ஹேக்கிங் மோசடிகள் ட்விட்டரிலும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
வருடத்தின் இறுதியில் தங்கம் விலையில் மாற்றமா.. இன்றைய நிலவரம் என்ன – விவரம் உள்ளே!
Exams Daily Mobile App Download
அதாவது, இந்திய சினிமா பிரபலம் சல்மான்கான் முதல் கூகுள் CEO சுந்தர் பிச்சை போன்ற முக்கிய புள்ளிகள் 40 கோடி நபர்களின் தகவல்கள் ட்விட்டர் தளத்தில் இருந்து ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேலை சேர்ந்த ஹட்சன் ராக் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் சட்ட விரோதமான தளத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.