வருடத்தின் இறுதியில் தங்கம் விலையில் மாற்றமா.. இன்றைய நிலவரம் என்ன – விவரம் உள்ளே!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.40,688க்கு விற்பனையாகி வருகிறது. தற்போது தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ தாண்டி விற்பனையாகி வருவது நகை பிரியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
தங்கத்தின் விலை:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருப்பதாலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதாலும் தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சனிக்கிழமை (டிச.24) அன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ. 40,608க்கு விற்பனை செய்யப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.25) அன்று விடுமுறை நாள் என்பதால் தேசிய பங்கு சந்தையில் எந்த வித மாற்றமும் இல்லை. அதனால் தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கமின்றி 24ம் தேதி நிலவரப்படியே விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு வாரத்தின் தொடக்க நாளான நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 40, 688 க்கு விற்பனையானது.
மின்தடை அறிவிப்பு.. டிச .29 தமிழகத்தில் இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது – விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
இந்த விலை இன்று குறையும் என்று நகைப்பிரியர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சற்று அதிருப்தி அளிக்கும் விதமாக தங்கம் விலை இன்று குறையாமல் நேற்றைய விலையிலேயே அதாவது ஒரு சவரன் ரூ. 40, 688க்கும் ஒரு கிராம் ரூ. 5,086 க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல வெள்ளியில் விலையிலும் மாற்றமில்லை. இன்றைய காலை நேர நிலவரப்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.74.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.