தமிழக அரசு துறைகளில் 4 லட்சம் காலிப்பணியிடங்கள் – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள 4 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு தமிழக அரசுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு உள்ளது.
புதிய கோரிக்கை:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவலின் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார நிதி நெருக்கடி நிலவியது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைவின் காரணமாக பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அவ்வாறு இருந்த போதிலும் அரசு ஊழியர்களை பொறுத்தவரை வேலை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தாலும் மாதமானால் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனாலும் பொருளாதார அளவில் பெரும் வீழ்ச்சியை சந்தித்ததால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சரண்டர், ஜி.பி.எஃப், வட்டி குறைப்பு போன்ற சலுகைகளை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5000 பரிசுத்தொகை – தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு!
தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர், ஜி.பி.எஃப், வட்டி குறைப்பு போன்ற சலுகைகளை திரும்ப வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மதுரையில் சமீபத்தில் மாநில அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆ.செல்வம் அவர்கள் தலைமையில் செயற்குழு நடைபெற்றது. இதில் வரும் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில மாநாடு நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அம்மாநாட்டில் பங்கேற்க முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு வைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் இரட்டை போனஸ்? 7வது ஊதியக்குழு தகவல்!
இம்மாநாட்டில் கடந்த ஆட்சியில் ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ததை திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது, சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்குவது, காலியான 4 லட்சம் பணியிடங்களை நிரப்புவது, மேலும் காண்ட்ராக்ட் ஒப்பந்த முறையை ரத்து செய்து காலமுறை சம்பளம் வழங்குவது போன்ற அனைத்து கோரிக்கைகளும் மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடத்தில் வலியுறுத்தப்படும் என்று அச்செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏழுமலை பேரூராட்சி எழுமலை போஸ்ட் மதுரை மாவட்டம் 15வது வார்டு அரசன் தெரு ஏழுமலை
நான் எழுமலை பேரூராட்சி பத்து வருடங்களாக ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகின்றேன் எனக்கு அரசு துப்புரவு பணியாளர் வேலை வேண்டும்