மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 34% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அகவிலைப்படி வழங்கப்பட மாட்டாது. நாட்டின் நிதி நிலை சரியான பிறகு வழங்கப்படும் என்று தெரிவித்தது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியது. அதனால் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தப்பட்டு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% ஆக வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து மேலும் 4% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படும் இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரை வழங்கப்படும். தற்போது ஏஐசிபிஐ 1.35 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 2022 இல், பணவீக்க விகிதம் 7 சதவீதமாக இருந்தது, பிப்ரவரி 2022 இல் 6.1 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை தொடர்பாக வதந்தி பரவல் – காவல்துறை எச்சரிக்கை
அதன்படி அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்கும். இதன் மூலம் ஏராளமான அரசு ஊழியர்களும், ஓய்வூதியதரர்களும் பயன் பெறுவார்கள். மேலும் ஊழியரர்களின் அடிப்படை ஊதியமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பயனளிக்கும். கடந்த முறை உயர்த்தப்பட்ட அகவிலைப்படியால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.