கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை தொடர்பாக வதந்தி பரவல் – காவல்துறை எச்சரிக்கை!
12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை தொடர்பாக சமூக வலைப்பக்கங்களில் அதிகமாக வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது. இது போன்ற வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
தற்கொலை வழக்கு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியின் விடுதியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என போராட்டக்காரர்கள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். ஆனால், உண்மையாகவே மாணவி எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்கிற விஷயம் புதிராகவே உள்ளது. தற்போது மாணவியின் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், மாணவி தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது கொலையா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மாணவியின் தற்கொலை விவகாரம் குறித்து சமூக வலை பக்கங்களில் பலவாறு வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது, தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிப்பது போன்ற வதந்தி வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கடலோர காவல்படையில் வேலை – ஊதியம்: ரூ.2,09,200/- வரை
அதாவது, மாணவியின் தந்தை ஏற்கனவே ஒரு முறை குடும்ப தகராறில் தீக்குளித்த வீடியோவை தற்போது மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தந்தை தீக்குளிப்பது போன்ற வீடியோவை சித்தரித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவியின் மரணம் குறித்து தவறான பதிவினை பகிர்ந்தாலோ அல்லது மக்களின் மத்தியில் நிம்மதியை குழைக்கும்படியான வீடியோவை பதிவு செய்தால் அந்த சமூக வலை பக்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.