இந்த வாரத்தில் 4 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தற்போது நடைபெற்று வரும் ஏப்ரல் மாதத்தின் 2வது வாரத்தில் பல்வேறு பண்டிகைகள் காரணமாக வங்கிகள் அனைத்தும் 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இதற்கான முழு பட்டியலையும் இப்பதிவில் காண்போம்.
வங்கி விடுமுறை
பொதுவாக ஒவ்வொரு ஆண்டு துவங்கும் போதும் அந்த ஆண்டிற்கான வங்கி விடுமுறை நாட்காட்டி பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டில் தற்போது நடைபெற்று வரும் ஏப்ரல் மாதம் பண்டிகைகளால் நிறைந்திருப்பதால் இம்மாதத்தில் மட்டும் மொத்தம் 15 நாட்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரத்தில் மட்டும் மொத்தம் 4 நாட்களுக்கு வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்பதை அனைத்து வாடிக்கையாளர்களும் கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 19 பேச்சுப்போட்டி!
அதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதிக்கு முன் அனைத்து முக்கியமான வேலைகளையும் முடித்து கொள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 17 வரை வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
அதாவது, ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி அம்பேத்கர் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, பைசாகி, வைசாகி, தமிழ்ப் புத்தாண்டு தினம், புனித வெள்ளி, பிஜு பண்டிகை மற்றும் விஷு போன்ற பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இப்போது வரவிருக்கும் வாரத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.
- ஏப்ரல் 14 – அம்பேத்கர் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி மற்றும் பைசாகியை முன்னிட்டு மேகாலயா, ஹிமாச்சலப் பிரதேசம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 15 – புனித வெள்ளி
- ஏப்ரல் 16 – போஹாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு அஸ்ஸாமில் வங்கிகள் மூடப்படும்.
- ஏப்ரல் 17 – ஞாயிறு பொது விடுமுறை