தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 19 பேச்சுப்போட்டி!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் 19 பேச்சுப்போட்டி!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் 19 பேச்சுப்போட்டி!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 19 பேச்சுப்போட்டி!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் அம்பேத்கா் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியை பற்றிய முழு விவரங்களை பார்ப்போம்.

மாணவர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தற்போது பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. மேலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் பள்ளிகளில் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 19ம் தேதி அன்று அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா அரங்கில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 9.30 மணியளவிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணியளவிலும் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள நினைக்கும் பள்ளி மாணவர்கள் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் இப்போட்டியில் கலந்து கொள்ள நினைக்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகளில் முதல்வரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!