நாடு முழுவதும் மே 2 முதல் 4 நாட்களுக்கு பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!
வரும் மே மாதம் 2ம் தேதியன்று நாடு முழுவதும் ஈதுல் பித்ர் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் மே 5ம் தேதி வரை தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது விடுமுறை
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈதுல் பித்ர் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஈதுல் பித்ர் பண்டிகை மே 3ம் தேதி வரும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளனர். இப்போது ஈதுல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 4 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படும் என பாகிஸ்தான் மத்திய அரசு நேற்று (ஏப்ரல்.26) அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பின்படி, ஈதுல் பித்ர் விடுமுறைகள் மே 2 திங்கள் முதல் மே 5 வியாழன் வரை அனுசரிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டம் – முழு விவரம் இதோ!
இப்போது மூன்று நாட்கள் விடுமுறையைப் பரிந்துரை செய்து பாகிஸ்தான் பிரதம மந்திரி ஷாபாஸ் ஷெரீஃபுக்கு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், பிரதமர் நான்கு நாட்கள் விடுமுறைக்கு தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மே 3 ஆம் தேதி ஈதுல் பித்ர் கொண்டாடப்படும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளதால், ஷவ்வால் நிலவு 29 ரமலான் (மே 1) மாலை நாட்டில் எங்கும் காணப்படாது என்று கூறியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும், ஏப்ரல் 30ஆம் தேதி இரவு முதல் மே 1ஆம் தேதி வரை நள்ளிரவு 1.28 மணிக்கு அமாவாசை பிறக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். சூரியனிலிருந்து சந்திரனுக்கும் இடையேயான பரிமாண வேறுபாடு 10 டிகிரியில் இருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் அது எட்டு டிகிரியில் இருக்கும். இதனால் டெலஸ்கோப் மூலம் கூட பார்க்க முடியாது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் மே 2ம் தேதி மாலை அன்று தெளிவான வானம் இருந்தால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நிலவு தெளிவாகவும் நீண்ட நேரம் பார்க்கவும் முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.