நாட்டில் இதுவரை 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து? மத்திய அரசு அதிரடி!
இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் மலிவான விலையில் உணவு பொருட்கள் பெற வேண்டும் என்பதற்காக ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகுதியற்றவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு ரத்து
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா கால கட்டத்தில் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ரேஷன் கார்டுகளை தவறான வழியில் பயன்படுத்துவதாக புகார்கள் பெறப்பட்டது. அத்துடன் ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு இடங்களில் ரேஷன் பொருட்களை பெற்று அதனை கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு விற்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதாவது, ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் கைரேகை பதிவு மேற்கொண்டு அதன்பின் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது தகுதியில்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து மத்திய அரசு, தகுதியில்லாதவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு – இந்திய அணிக்கு வெண்கல பதக்கம்!
மேலும் பல நாட்கள் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் நபர்களும் அரசால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நாட்டில் இதுவரை 2013ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை என மொத்தமாக 4.74 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான நபர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பணக்காரர்கள் மற்றும் ரேஷன் கார்டை நீண்ட காலம் பயன்படுத்தாமல் இருப்பவர்களும் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.