சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு – இந்திய அணிக்கு வெண்கல பதக்கம்!

0
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு - இந்திய அணிக்கு வெண்கல பதக்கம்!
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு - இந்திய அணிக்கு வெண்கல பதக்கம்!
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு – இந்திய அணிக்கு வெண்கல பதக்கம்!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு பெற்றது. மேலும் இந்த போட்டியில் இந்திய மகளிர் ஏ அணி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. மேலும் இது குறித்த விரிவான தகவல்கள் கீழே உள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

தமிழகத்தில் தற்போதைய அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதே போல் விளையாட்டு துறைகளிலும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையை அடுத்தும் மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட போட்டியை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Exams Daily Mobile App Download

சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் 6 அணிகள் கொண்டு 30 போட்டியாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பெரிய அளவில் நடத்தப்படவில்லை. செஸ் போட்டிகளில் இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதால் சென்னையில் இந்த போட்டிகள் நடைபெற்றதாக ஃபிடே அறிவித்துள்ளது.

Common Wealth போட்டிகள் 2022: கடைசி நாளில் இந்தியா 4 தங்க பதக்கம் – முழு பட்டியல் இதோ!

இதனை தொடர்ந்து 29ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர். இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் உக்ரைன் அணி தங்க பதக்கம், ஜார்ஜியா அணி வெள்ளி புத்தகத்தையும் கைப்பற்றியது. இந்திய மகளிர் ஏ அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இன்றுடன் 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு பெற்றது. மேலும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நிறைவு விழா நடைபெற உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!