4.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 203 சதவீத அகவிலைப்படி உயர்வு – ஜனவரி 2022 முதல் நிலுவைத்தொகை!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து தற்போது அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் 4.5 லட்சம் அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 203 சதவீதம் உயர்த்த முதல்வர் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வந்த நிலையில் அரசுக்கு வருவாய் பாதிக்கப்பட்டதால் ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு நிவாரணம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது நோய் பரவல் குறைந்து தொழில் துறைகள் பழைய நிலைக்கு திரும்பி உள்ளதால் வரிவசூல் அதிகரித்துள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மீண்டும் வழங்கப்படுகிறது. பீகாரில் 4.5 லட்சம் பணியாளர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 203 சதவீதம் உயர்த்த முதல்வர் நிதிஷ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் பலன் ஜனவரி மாதம் முதல் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பீகார் நிரந்தர அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது அரசால் ஏற்கப்பட்டுள்ளது. பீகார் மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 203 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. நிதித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகை இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நிலுவைத் தொகையாக செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Accenture நிறுவனத்தில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2022 – தகுதி உட்பட முழு விபரங்களுடன்!
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி அனைத்தும் ரொக்கமாக வழங்கப்படும் என நிதித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் பலன் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று நிதித்துறை உத்தரவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கும் ஜனவரி 1 முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இது ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வந்தது.