34 ரயில் சேவைகள் மீண்டும் தொடக்கம் – தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரயில் போக்குவரத்தில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் ரயில்வே வாரியம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது நிறுத்தப்பட்டிருந்த 34 ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த பிறகு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. மேலும் நாட்டில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் கொரோனா கால கட்டத்தில் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த ரயில் போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில் குறிப்பாக பல்வேறு இடங்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் ரயில் போக்குவரத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில், திருச்சி – ஈரோடு – திருச்சி, திருச்சி – ஈரோடு – திருச்சி உள்ளிட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை ஜூலை 9ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
இதனை தொடர்ந்து திருச்செந்தூர் – திருநெல்வேலி – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை, மதுரை – செங்கோட்டை – மதுரை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை, திருநெல்வேலி – செங்கோட்டை – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை, செங்கோட்டை – திருநெல்வேலி – செங்கோட்டை உள்ளிட்ட முன்பதிவில்லா ரயில் சேவையை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கடப்பா – அரக்கோணம் , MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை, சேலம் – கரூர் – சேலம் உள்ளிட்ட சேவைகள் வருகிற ஜூலை 27ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.