தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு அமல்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு அமல்? வலுக்கும் கோரிக்கை!

அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதாவது அகவிலைப்படி 34% சதவீதமாக உயர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசும், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

DA உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020 ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. ஓராண்டுக்கு பிறகு கடந்த 2021 ல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31% சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை மேலும் 3% உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு முன் தேதியிட்டு 2022 ஜனவரி 01 முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த உயர்வு 7 வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ம் தேதி அன்று தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் படி, அகவிலைப்படி உயர்வு நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்வு, 2016 ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் நிதித்துறை ஆணையின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் 31 % அகவிலைப்படியை 34% ஆக அதாவது 3% அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயா்வை அறிவிக்கிறதோ, அதே தேதியில், அதே விகிதத்தில், தமிழக அரசு ஊழியா்களுக்கும் மாநில அரசு வழங்கும் என்பதே இதுவரையான நிலைப்பாடு. எனவே, தமிழக அரசு ஊழியா்களுக்கும் 34 சதவீதம் அகவிலைப்படியை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!