மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 34% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு?
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 34% அகவிலைப்படி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப மத்திய மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு வருடம் தோறும் அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. இந்த நிலவியல் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த தொகை நோய் தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் தீவிரமடையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? வாய்மொழி உத்தரவு!
இதனால் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வீட்டு வாடகை படி உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து புத்தாண்டு பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் 34 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தீவிரமடையும் ஓமைக்ரான் பாதிப்பு,10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? முதல்வர் ஆலோசனை!
அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்றால் 34 சதவீத அகவிலைப்படி உயர்வின் படி ரூ.6,120 கிடைக்கும் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில் 34 சதவீத அகவிலைப்படி ரூ.6,120 கூடுதலாக கிடைக்கும். அடிப்படை சம்பளம் ரூ.56,900 எனில் 34 சதவீத அகவிலைப்படி உயர்வின் படி ரூ.19,346 கூடுதல் தொகையாக ஊழியருக்கு கிடைக்கும்.