தமிழகத்தின் 4 மாவட்டங்களில் தீவிரமடையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? வாய்மொழி உத்தரவு!
கொரோனா நோய் பரவலின் 3-வது அலை வர இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் காரணமாக சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒமைக்ரான் பரவல்
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்துள்ளதை அடுத்து தற்போது ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அத்துடன் கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை வர இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு தென் ஆப்பிரிக்காவில் உருவான புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது.
தீவிரமடையும் ஓமைக்ரான் பாதிப்பு,10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? முதல்வர் ஆலோசனை!
அத்துடன் 24 பேருக்கு தொற்று உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த 34 பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அத்துடன் ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள். எனவே விமான நிலையங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!
இதனால் தொற்று கண்டறியப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சென்னை, மதுரை, திருவண்ணாமலை, சேலம் போன்ற ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.