தமிழகத்தில் வரும் 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
கடலூர் மாவட்டம், வடலூரில் தனியார் வேலைவாய்ப்பு துறை மூலம் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் கி.சிவசுப்ரமணியம் செய்தி குறிப்பு வாயிலாக வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பல லட்சம் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால் சில மக்கள் தங்களது உறவினர்கள், பெற்றோர்கள், குடும்பங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் தொற்றினை கட்டுப்படுத்த அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பிறகு ஊரடங்கு, பொது முடக்கம், வெளியில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் மத்திய அரசின் தீவிர முயற்சியால் சொந்த நாட்டிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பல வகையான ஆய்வுக்கு உட்படுத்தி இறுதியாக மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்கப்பட்டது. இதனால் தொற்றின் வீரியம் மிகவும் குறையத் தொடங்கியது. இருப்பினும் ஊரடங்கு, பொது முடக்கம் காரணத்தால் மக்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் வறுமையில் உணவுக்கு கூட வழியில்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டது. பின் அரசின் அயறாத முயற்சியினால் அனைத்து மக்களுக்கும் சரியான நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள், உணவு போன்றவை கொண்டு சேர்க்கப்பட்டது.
தமிழக காவல்துறையினருக்கு புதிய சீருடை சின்னம் – அதிரடி உத்தரவு!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்துள்ளதால் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்பினை அதிகரித்துள்ளது. இதன் மூலம் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் பயன் பெறும் விதமாக அமைந்துள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமானது பண்ருட்டி வட்டம், மருங்கூர், கொள்ளுக்காரன்குட்டை இல் உள்ள வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்க உள்ளது. எனவே 8,10 ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு கல்லூரியில் கலை, அறிவியல், நர்சிங், வணிக பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படிப்புகள் பயின்றுள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். விருப்பமுள்ள நபர்கள் 04142-290039, 9499055908 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கி.சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.