தமிழக காவல்துறையினருக்கு புதிய சீருடை சின்னம் – அதிரடி உத்தரவு!

0
தமிழக காவல்துறையினருக்கு புதிய சீருடை சின்னம் - அதிரடி உத்தரவு!
தமிழக காவல்துறையினருக்கு புதிய சீருடை சின்னம் - அதிரடி உத்தரவு!
தமிழக காவல்துறையினருக்கு புதிய சீருடை சின்னம் – அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு காவல்துறையினருக்கு புதிய சீருடை சின்னம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சின்னம் எப்போது நடைமுறைக்கு வரும், என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று இந்த பதிவில் காணலாம்.

தமிழ்நாடு காவல்துறை:

தமிழ்நாடு காவல்துறை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களை தடுக்கவும் அமைக்கப்பட்ட அரசு சார்ந்த நிறுவனமாகும். இது இந்தியாவின் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் தலைமையில் இயங்குகிறது. பொதுமக்களின் அன்றாட வாழ்வில் காவல்துறையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதாவது பொது இடங்களில், வீட்டில் நடக்கும் சண்டைகள், சாதி சண்டைகள், கலவரம்,போன்றவற்றை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு காவல்துறையில் பலவகையான பணியிடங்கள் உள்ளன. மக்களின் தேவைக்கேற்ப சேவை செய்ய பல்வேறு துறைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் எளிதில் எந்த ஒரு பிரச்சனையையும் கையாள முடியும். தமிழகத்தில் கொரோனா பரவல் காலத்தில் காவல்துறையினரின் பங்கு இன்றியமையாதது. மக்களின் நன்மைக்காக இரவு, பகல் என்று பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு மக்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது காவலர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் வீட்டு செலவு தொடர்பான கணக்கெடுப்பு பணி – ஆகஸ்ட் 1 முதல் துவக்கம்!

தமிழகத்தில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான காக்கி உடை சீருடை இருந்தாலும் அவர் அவர்களின் பணிகளுக்கு ஏற்ப சீருடையில் சின்னங்கள் இடம்பெறும். இந்த நிலையில் ‘தமிழக போலீஸ்’ என்ற என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புதிய சீருடை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய போலீஸ் சீருடை சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், அசோகா சின்னம், தேசிய கொடி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு போலீசார், ரயில்வே போலீசார், மகளிர் போலீசார், போக்குவரத்து போலீசார் என 1 லட்சத்து 17 ஆயிரம் காவலர்களுக்கு இந்த சீருடை சின்னம் வழங்கப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!